மட்டக்களப்பு- புதுக்குடியிருப்பு பகுதியில் காரும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி கோரவிபத்து ஒன்று இன்று(18) மாலை 3.45மணியளவில் ஏற்பட்டுள்ளது.
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் புதுக்குடியிருப்பு எரிபொருள் நிலையத்திற்கு அருகாமையில் சிறிய ரக கார் ஒன்றும் மோட்டர்சைக்கிள் ஒன்றும் மோதியதாலே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் இருந்து களுவாஞ்சிக்குடி நோக்கி சென்ற காரும் புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் நேருக்கு நேர் மோதி குறித்த விபத்தானது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த புதுக்குடியிருப்பைச் சேர்ந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் கார் பலத்த சேதத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments: