சிறைக் கைதிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கான நடவடிக்கையாக புதிய பிணை வழிகாட்டல்கள் அடங்கிய கடிதத்தை சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதன்படி ஹெரோயின் போதைப்பொருள் தொடர்பாக வழக்கு தாக்கல் செய்யும்போது 2 கிராமுக்கு குறைவான ஹெரோயின் போதைப் பொருள் வகைக்கு அடுத்தப்படியாக 2 முதல் 4 கிராம் எடையுடனான ஹெரோயின் போதைப்பொருள் கைதுகளுடன் தொடர்புடையவர்களுக்கும் பிணை வழங்குவதற்கான புதிய வகையை அறிமுகப்படுத்துவது பொருத்தமானது என்று சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஹெரோயின் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை சிறைச்சாலையில் வைப்பது தொடர்பிலும் சட்டமா அதிபர், பிணை திருத்தம் குறித்து ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதேநேரம் ஒரு வருட சிறை தண்டனை வழங்கக் கூடிய குற்றம் தொடர்பில் சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும்போது, மன்றில் முன்னிலைப்படுத்தப்படும் முதலாவது சந்தர்ப்பத்தில் பிணை வழங்குவதற்கான எதிர்ப்பிற்கு விஷேட காரணம் இல்லையாயின் அதனை நீதிமன்றில் அறிக்கைப்படுத்த வேண்டும் எனவும் சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.
0 comments: