Home » » பந்துவீச்சாளர் ஷிரான் பெர்னாண்டோவுக்கு மாத்திரம் கொரோனா தொற்று உறுதி- போட்டிகள் தடையின்றி தொடரும்!!

பந்துவீச்சாளர் ஷிரான் பெர்னாண்டோவுக்கு மாத்திரம் கொரோனா தொற்று உறுதி- போட்டிகள் தடையின்றி தொடரும்!!

 


இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச போட்டிகள் திட்டமிட்டப்படி முன்னெடுக்கப்படும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் செயலாளர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்.


பங்களாதேஷ் சென்றுள்ள இலங்கை குழாமில் பந்துவீச்சாளர்களான இசுறு உதான மற்றும் ஷிரான் பெர்னாண்டோ ஆகியோருக்கும், பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் சமிந்த வாஸுக்கும் கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இந்நிலையில், இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட இரண்டவாது கொவிட் பரிசோதனைக்கு அமைய, பந்துவீச்சாளர் ஷிரான் பெர்னாண்டோவுக்கு மாத்திரம் மீள தொற்று உறுதிசெய்யப்பட்டதுடன், மற்றைய இருவருக்கு எதிர்மறையான பெறுபேறு கிடைத்திருந்ததாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இன்றைய போட்டிகள் திட்டமிட்டப்படி முன்னெடுக்கப்படும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் செயலாளர் தெரிவித்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |