தமக்கு கொவிட் - 19 தொற்றுறுதியானதாக கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் மூதூர் பகுதியில் அனுராதா யாஹம்பத் கலந்துக்கொண்டிருந்த நிகழ்வொன்றில் பங்கேற்றிருந்த ஒருவருக்கு, கொவிட்19 தொற்றுறுதியானது.
இதனையடுத்து அனுராதா யாஹம்பத் சுயதனிமைப்படுத்திக்கொண்டிருந்த நிலையில், இவ்வாறு தொற்றுறுதியாகியுள்ளது.
இதனையடுத்து தன்னை சுயதனிமையில் ஈடுபடுத்திகொண்ட அவர், கடந்த சில நாள்களாக தன்னுடன் மிகநெருக்கமாக பழகியவர்கள், தங்களை தாங்கள் சுயதனிமைப்படுத்தி கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
0 comments: