Home » » கிரான் பிரதேச செயலகத்தில் பணியாற்றுகின்ற உத்தியோகத்தர்களுக்கு பிசிஆர் பரிசோதனை முன்னெடுப்பு!!

கிரான் பிரதேச செயலகத்தில் பணியாற்றுகின்ற உத்தியோகத்தர்களுக்கு பிசிஆர் பரிசோதனை முன்னெடுப்பு!!

 


எஸ்.எம்.எம்.முர்ஷித்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொவிட் மூன்றாம் அலையின் பின்னர் கொவிட் வைரஸ் தொற்றாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவருவதனால் மாவட்டத்தில் கொவிட் கட்டுப்பாட்டு செயலணியினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

மாவட்ட அரசாங்க அதிபரும் கொவிட் கட்டுப்பாட்டு செயலணியின் தலைவருமாகிய கே.கருணாகரனின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக மாவட்டம் பூராகவும் சுகாதாரத்துறையினரும், முப்படையினரும் இணைந்து பல்வேறு விழிப்புணர்பு நடவடிக்கைகள் மற்றும் இறுக்கமான கட்டுப்பாடுகளையும் நடைமுறைப்படுத்தி மாவட்டத்தில் உள்ள அரச நிறுவனங்களில் பணியாற்றுகின்ற உத்தியோகத்தர்களுக்கு கொவிட் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதன் அடிப்படையில் இன்று செவ்வாய்க்கிழமை கிரான் பிரதேச செயலகத்தில் பணியாற்றுகின்ற உத்தியோகத்தர்களுக்கு கிரான் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் சுகாதார பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது பிரதேச செயலகத்தில் கடமையாற்றுகின்ற உயரதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |