நாட்டில் பி.சி.ஆர் பரிசோதனையை அதிகரிக்கவும், மாவட்ட அளவில் ஆய்வக வசதிகளை உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் அரசாங்கம் அவசர நடவடிக்கைகளை எடுக்கவிருக்கிறது. இது குறித்து விவாதிக்க சுகாதார அதிகாரிகள் இன்றைய தினம் முக்கிய கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது.
ராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே கலந்து கொண்ட இந்த கூட்டத்திற்கு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தலைமை தாங்கினார்.
இதன்போது, கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களை மையமாகக் கொண்டு கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்டத்தை விரிவுப்படுத்த முடிவு செய்யப்பட்டது.
நாட்டில் பி.சி.ஆர் பரிசோதனையை அதிகரிக்கவும், மாவட்ட அளவில் ஆய்வக வசதிகளை அதிகரிக்கவும் இந்தக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஏற்கனவே நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனைகளின் முடிவுகளும் விரைவில் வெளியிடப்படும்.
இதேவேளை, பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுபவர்கள் முடிவு கிடைக்கும் வரை வீட்டிலேயே இருப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
இந்தநிலையில் அனைத்து சிகிச்சை வசதிகளுக்கும் போதுமான ஒக்சிசன் வழங்கப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
0 comments: