Home » » போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் மட்டக்களப்பை சேர்ந்த ஒருவர் உட்பட 09பேர் கைது...!!

போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் மட்டக்களப்பை சேர்ந்த ஒருவர் உட்பட 09பேர் கைது...!!

 


நாடளாவிய ரீதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது போதைப் பொருட்களுடன் 9 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.


இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
நாடளாவிய ரீதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரினால் நேற்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்ட சோதனையில் தம்புள்ளை பகுதியில் வேனில் ஹெரோயின் போதைப் பொருளை கடத்தியமை தொடர்பில் ஆரையம்பதி , சாய்ந்தமருது ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவர்களிடமிருந்து 93 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

தெமட்டகொட பகுதியில் 80 கிராம் ஐஸ் ரக போதைப் பொருள் மற்றும் ஒரு இலட்சத்து 66 ஆயிரம் ரூபாய் பணத்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெல்லம்பிட்டி பகுதியில் 2 கிலோ கிராம் கஞ்சா போதைப் பொருளுடன் ஒருவரும் , மன்னார் பகுதியில் ஒன்றரை கிலோ கஞ்சா போதைப் பொருளுடன் இன்னுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் திறப்பனை பகுதியில் 500 கிராம் கஞ்சா போதைப் பொருளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொஸ்லந்த பகுதியில் மூன்று ஏக்கர் நிலப்பகுதியில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்துள்ளதாக கூறப்படும் சந்தேக நபரை கைது செய்துள்ள அதிரடிப்படையினர், குறித்த கஞ்சா தோட்டத்தை அழித்துள்ளனர். சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |