Advertisement

Responsive Advertisement

கிரான்குளத்தில் 1271 மதுபான போத்தல் மீட்பு ! மதுபான விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது

 


மட்டக்களப்பு கிரான்குளம் பிரதேசத்தில் மதுபானசாலை ஒன்றில் பின்பகுதியை திறந்து மதுபான விற்பனையில் ஈடுபட்டுவந்த இருவரை இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்ததுடன் 4 இலச்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான 1,271 கால் போத்தல் கொண்ட மதுபானங்களை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.


இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்கவின் ஆலோசனைக்கமைய மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர் இன்று காலையில் குறித்த மதுபானசாலையை கண்காணிப்பில் ஈடுபட்டுவந்தனர்.

இதன்போது மதுபானசாலையின் பின்பகுதி வாசல் பகுதியால் ஒருவர் மதுபானங்களை வியாபாரத்துக்காக வெளியில் எடுத்துக் கொண்டுவந்த நிலையில் பொலிசார் அவரை மடக்கிபிடித்து கைது செய்தனர்.

இதனைதொடர்ந்து குறித்த மதுபானசாலை பின்பகுதி வாசல் பகுதியால் பொலிசார் முற்றுகையிட்டனர் இதன்போது மதுபானசாலை வெளிப்பகுதியில் மதுபானங்களை வைத்துகொண்டிருந்து மதுபானசாலையில் கடமையாற்றும் ஒருவரை கைது செய்ததுடன் அங்கிருந்து 1271 கால் போத்தல் கொண்ட மதுபானங்களை மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் மீட்கப்பட்ட மதுபானங்களை மதுவரிதிணைக்களத்திடம் ஒப்படைத்து சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments