Home » » மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சுமார் 11 மில்லியன் ரூபாய் பெறுமதியான பீ.சி.ஆர்.இயந்திர உபகரணங்கள் கையளிப்பு!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சுமார் 11 மில்லியன் ரூபாய் பெறுமதியான பீ.சி.ஆர்.இயந்திர உபகரணங்கள் கையளிப்பு!

 


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பீ.சி.ஆர்.இயந்திரம் உட்பட சுமார் 11 மில்லியன் ரூபாய் பெறுமதியான உபகரணங்களை மலேசியாவிலுள்ள தன்னார்வ அலாஹா பவுண்டேசன் அமைப்பு இன்று (வெள்ளிக்கிழமை) வழங்கியுள்ளது.


குறித்த நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில், மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியம் விடுத்த வேண்டுகோளுக்கமைய மலேசியாவிலுள்ள தன்னார்வ அலாஹா பவுண்டேசன் அமைப்பு, சுமார் 11 மில்லியன் ரூபாய் பெறுமதியான உபகரணங்களை வழங்கியுள்ளது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நா.மயூரன், மட்டக்களப்பு மாவட்ட கொரோனா செயலணியின் தலைவர் மேஜர் ஜெனரல் கொஸ்வத்த, மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் என்.விஜயசேன ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதேவேளை களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தின் ஊடாக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை பிரிவுக்கு, சுமார் 2 இலட்சம் ரூபாய் பெறுமதியிலான கட்டில்கள் மற்றும் மெத்தைகள், விரிப்புகள் ஆகியன வழங்கி வைக்கப்பட்டன.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |