Home » » ஒரு மீட்டர் இடைவெளி இரண்டு மீட்டராகிறது

ஒரு மீட்டர் இடைவெளி இரண்டு மீட்டராகிறது

 


கொரோனா பரவலை அடுத்து ஒரு மீற்றர் சமூக இடைவெளியில் மாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டும் என இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.


இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டபோதே அவர் இதனை தெரிவித்தார்.

தற்போது நாடளாவிய ரீதியில் வேகமாக பரவிவரும் புதிய கொரோனா பரவலையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என்ற சுகாதார பரிந்துரையில் மாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டும் என வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அதற்கமைய, தற்போது கடைப்பிடிக்கப்பட்டுவரும், ஒரு மீற்றர் சமூக இடைவெளியை ஆகக் குறைந்தது 2 மீற்றர்களாக அதிகரிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |