Home » » செங்கலடி பொதுச்சந்தை மறு அறிவித்தல் வரை பூட்டு!

செங்கலடி பொதுச்சந்தை மறு அறிவித்தல் வரை பூட்டு!

 




(எம்.ஜி.ஏ நாஸர்)

மட்டக்களப்பு ஏறாவூர்ப் பற்று பிரதேசத்தில் கொவிட்-19 தொற்றுக்குள்ளான சிலர் அடையாளங்காணப்பட்டதையடுத்து செங்கலடி பொதுச்சந்தை மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.

இச் சந்தை தற்காலிகமாக செங்கலடி பாடசாலை மைதானத்தில் அன்று முதல் இயங்குகிறது.

எனினும் வியாபாரிகளுக்கு கூடாரம் மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படாதுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏறாவூர்ப் பற்று பிரதேச சுகாதார வைத்தியதிகாரி பிரிவின் சில பகுதிகளில் அண்மையில் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனைல் கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளான சிலர் அடையாளங் காணப்பட்தையடுத்து சுகாதாரத் துறையினரின் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக பொதுமக்கள் ஒன்று கூடுவதைத்தடுக்கும் நோக்குடன் செங்கலடி பொதுச்சந்தை இடமாற்றப்பட்டுள்ள போதிலும் அங்காடி வர்த்தகர்களுக்கு கூடாரம் அமைக்கப்படாதுள்ளதனால் வெயிலின் பாதிப்பை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வியாபாரிகளிடம் செங்கலடி பிரதேச சபை வரி அறவிடுகின்ற போதிலும் வியாபாரிகள் மற்றும் பொது மக்களது நலன்கருதி குடிநீர் வசதியைக்கூட ஏற்படுத்தவில்லையென கவலை தெரிவிக்கப்படுகிறது.





Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |