திண்மக்கழிவு முகாமைத்துவம் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று மட்டக்களப்பு மாவட்ட செயலத்தில் நேற்று (05) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களது தலைமையில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன், மேலதிக அரசாங்க அதிபர்களான திருமதி.சுதர்சினி சிறிகாந்த், திருமதி. நவரூபரஞ்சினி முகுந்தன், மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தி. சரவணபவன், மாநகர ஆணையாளர் எம்.தயாபரன், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் எஸ்.கோகுலன், பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் சீ.பிரகாஷ், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன் உள்ளிட்ட ஏனைய திணைக்களங்களின் உயரதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது மட்டக்களப்பு மாநகர சபைக்கான திருப்பெருந்துறை திண்மக்கழிவகற்றும் நிலையம் தொடர்பான குறைபாடுகள் தொடர்பில் கதைக்கப்பட்டதுடன் அவற்றிற்கான தீர்வுத்திட்டங்கள் முன்வைக்கப்பட்டு அவற்றிற்கான அமைதியும் வழங்கப்பட்டது.
அத்தோடு கொடுவாமடு திண்மக்கழிவகற்றும் நிலையத்திற்கு எவ்வாறான கழிவுகளை கொண்டு செல்வது, பொது மக்களது குப்பைகளை எவ்வாறு அகற்றுவது வைத்தியசாலை கழிவுகளை எவ்வாறி கையாழ்வது என்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது மட்டக்களப்பு மாநகர சபைக்கான திருப்பெருந்துறை திண்மக்கழிவகற்றும் நிலையம் தொடர்பான குறைபாடுகள் தொடர்பில் கதைக்கப்பட்டதுடன் அவற்றிற்கான தீர்வுத்திட்டங்கள் முன்வைக்கப்பட்டு அவற்றிற்கான அமைதியும் வழங்கப்பட்டது.
அத்தோடு கொடுவாமடு திண்மக்கழிவகற்றும் நிலையத்திற்கு எவ்வாறான கழிவுகளை கொண்டு செல்வது, பொது மக்களது குப்பைகளை எவ்வாறு அகற்றுவது வைத்தியசாலை கழிவுகளை எவ்வாறி கையாழ்வது என்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments: