உலக சுகாதார ஸ்தாபனத்தின் covax திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட astrazeneca covishield தடுப்பூசிகள் இன்று முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படவுள்ளன.
இதன் முதற்கட்டமாக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக ராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
covax திட்டத்தின் மூலம் நாட்டிற்கு வழங்கப்பட்ட 2 லட்சத்து 64 ஆயிரம் astrazeneca covishield தடுப்பூசிகள் நேற்று முன்தினம் கட்டுநாயக்க விமான நிலையமூடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
இதேவேளை கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் 7 லட்சத்து 29 ஆயிரத்து 563 பேருக்கு astrazeneca covishield தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதனிடையே இலங்கை கோரியிருந்த AstraZeneca COVIShield தடுப்பூசிகளை விநியோகிப்பதில் தாமதம் ஏற்படக்கூடும் என இந்தியாவின் சீரம் நிறுவனம் இலங்கை சுகாதார தரப்பிடம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் சீரம் நிறுவனம் கடிதம் மூலம் இதனை அறிவித்துள்ளதாக ராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை வாரமொன்றில் 3 மில்லியன் AstraZeneca COVIShield தடுப்பூசிகளை வழங்குமாறு சீரம் நிறுவனத்திடம் சுகாதார அமைச்சு கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments: