Advertisement

Responsive Advertisement

குடும்ப தகராறு காரணமாக தாயார் விபரீத முடிவு, 3 பிள்ளைகளுடன் கிணற்றில் குதிப்பு!!

 


கிளிநொச்சி - வட்டக்கச்சி பிரதேசத்தில் தமது மூன்று பிள்ளைகளுடன் தாய் ஒருவர் கிணற்றுக்குள் குதித்திருந்த நிலையில், காணாமல் போயிருந்த இரண்டு பிள்ளைகளும் உயிரிழந்ததாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.


எனினும் சடலங்கள் இதுவரை மீட்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் நீதிமன்ற அனுமதியுடன் இன்றைய தினம் சடலங்களை மீட்பதற்கான நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

தனது மூன்று பிள்ளைகளுடன் தாய் ஒருவர் நேற்று பிற்பகல் கிணற்றில் குதித்திருந்தார்.

பின்னர் அவர், உயிருடன் மீட்கப்பட்டிருந்த நிலையில் ஒரு பிள்ளை சடலமாக மீட்கப்பட்டிருந்தது.

பின்னர் காணாமல் போயிருந்த மற்றைய இரு பிள்ளைகளும் தேடப்பட்டு வந்தநிலையில் உயிரிழந்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் 2, 5 மற்றும் 8 வயதுகளை உடைய பிள்ளைகளே மரணித்துள்ளனர்.

Post a Comment

0 Comments