Home » » மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் 2020 ஆம் ஆண்டிற்கான பழைய பொருட்கள் ஏல விற்பனை!!

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் 2020 ஆம் ஆண்டிற்கான பழைய பொருட்கள் ஏல விற்பனை!!

 


அரச பிரமாணம் மற்றும் சுற்று நிருபத்தின் அடிப்படையில் அரச நிறுவனங்களில் ஒவ்வொரு நிதி ஆண்டின் இறுதியிலும் இருப்பு பொருட்கள் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு அதன் பின்னர் பயன்படுத்தமுடியாத, பாவனைக்குதவாத பொருட்கள் பகிரங்க ஏல விற்பனை செய்யப்படும்.


இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் 2020 ஆம் ஆண்டிற்கான இருப்பு பொருட்களின் கணக்கெடுப்பின் பின்னரான பகிரங்க ஏல விற்பனை இன்று (22) மாவட்ட செயலகத்திலே இடம்பெற்றது.

இதன்போது பொதுமக்கள், பழைய பொருட்கள் கொள்வனவு செய்வோர் வருகைதந்து பொருட்களுக்கான விலையினை ஏலம் வைத்து பணத்தினை செலுத்தி பொருட்களை எடுத்துச் சென்றனர்.

இவ் ஏல விற்பனையானது கணக்கெடுப்பு சபைத் தலைவர், மாவட்ட செயலக கணக்காளர், அரச அதிகாரிகள், பொதுமக்கள் முன்னிலையில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |