Home » » பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை போராட்டத்திற்குத் நீதிமன்றங்கள் தடை உத்தரவு!!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை போராட்டத்திற்குத் நீதிமன்றங்கள் தடை உத்தரவு!!

 


ஏ.எச்.ஏ. ஹுஸைன்

அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேசத்திலிருந்து திருகோணமலை மாவட்டம் பொலிகண்டி வரைக்கும் பொத்துவில் யாழ்ப்பாண பிரதான வீதியினூடாக நடைபெறத் திட்டமிட்டுள்ள எதிர்ப்புப் போராட்டம் மற்றும் வாகனப் பேரணி நடைபெறுவதைத் தடுப்பதற்கான தடையுத்தரவை அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றம் கல்முனை நீதிவான் நீதிமன்றம் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றம் ஆகியவை பிறப்பித்துள்ளன.

இந்தப் போராட்டத்தில் திருகோணமலை ஆயர் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் என 32 பேருக்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வின்போது மக்களை தூண்டிவிட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் சிவில் அமைப்புக்கள் மற்றுமு; ஏனைய அமைப்புக்கள் இந்தப் போராட்டத்தை நடத்துவதாக தெரிவித்து திருக்கோவில் கல்முனை களுவாஞ்சிக்குடி ஆகிய பிரதேசங்களின் பொலிஸார் அவ்வவ் நீதிமன்றங்களில் தாக்கல் செய்த அறிக்கையின் பிரகாரம் எதிர்ப்புப் போராட்டம் மற்றும் வாகனப் பேரணி என்பனவற்றை நடத்த நீதிமன்றங்கள் தடைவிதித்துள்ளன.

அத்துடன் இந்தத் தடையுத்தரவு பற்றிய அறிவிப்புக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் பிரமுகர்கள் சிவில் அமைப்புக்கள் உள்ளிட்ட 32 பேருக்கும் பொலிஸாரால் கையளிக்கப்பட்டுள்ளன.

கொவிட் 19 தொற்று மிக வேகமாகப் பரவக் கூடிய இக்காலகட்டத்தில் மேற்படி செயலானது பொதுச் சுகாதாரத்திற்குப் பங்கத்தை ஏற்படுத்தும் என்பதனால்; பொதுமக்களின் உயிர் சுகாதாரம் என்பனவற்றிகும் பாதிப்புக்கள் ஏற்படும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் இருந்து விலகி இருக்குமாறு மேற்படி நபர்களுக்கு 1979ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க குற்றவியல் நடபடிமுறைக் கோவையின் பிரிவு 106(1) இன் கீழ் செயற்பட்டு இத்தால் கட்டளையிடப்படுகிறது” என நீதிமன்றக் கட்டளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |