Home » » பெரியகல்லாறு மத்திய கல்லூரியின் புதிய அதிபராக இராஜேந்திரன் பதவியேற்பு

பெரியகல்லாறு மத்திய கல்லூரியின் புதிய அதிபராக இராஜேந்திரன் பதவியேற்பு

 


செ.துஜியந்தன் 


பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரியகல்லாறு மத்திய கல்லூரியின் புதிய அதிபராக வடிவேல் இராஜேந்திரன் தனது கடமையை (இன்று22) பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் கோட்டக்கல்வி அதிகாரி திவிதரன் , பிரதியதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்களும் கலந்து கொண்டனர். கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் திகதி குறித்த பாடசாலையின் அதிபர் பதவிக்கான நேர்முகப் பரீட்சை திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண கல்வி அமைச்சில் இடம்பெற்றிருந்தது.
இந்நேர்முகப் பரீட்சையில் சித்தியடைந்த அதிபருக்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எம்.சி.எல். பெர்ணான்டோவினால் இவருக்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளது. தரம்1 ஏ.பி வகுப்பினைச் சேர்ந்த பாடசாலையான பெரிய கல்லாறு மத்திய கல்லூரியானது பிரதேசத்தில் மிகவும் பழமையான பாடசாலையாகும்.
இங்கு புதிய அதிபராக பதவியேற்றுக்கொண்ட வடிவேல் இராஜேந்திரன் தனது ஆரம்பக் கல்வியை கல்லாறு விநாயகர் வித்தியாலயத்திலும், இடைநிலை மற்றும் உயர்தரக் கல்வியை பெரிய கல்லாறு மத்திய கல்லூரியிலும் கற்ற்றுள்ளார். அதன் பின் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் இணைந்து கல்விகற்று விஞ்ஞானபாடபட்டதாரி ஆசிரியராக சேவையில் இணைந்து கொண்டார்.
ஆசிரியராக தனது முதல் நியமனத்தை திகிலிவெட்டை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை பெற்றுக்கொண்டவர். பின்னர் கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலை, கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயம் ஆகியவற்றிலும் ஆசிரியராக கடமையாற்றியுள்ளார்.
2016 இல் நடைபெற்ற அதிபர் சேவைப் பரீட்சையில் சித்தியடைந்தவர் கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் பிரதியதிபராகவும் கடமையாற்றியுள்ளார். இந்நிலையில் தனது சொந்த ஊரான தான் கற்ற பாடசாலையான பெரியகல்லாறு மத்திய கல்லூரியில் திங்கட்கிழமை(22) முதல் புதிய அதிபராக பதவியேற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |