கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயிலுடன் இளைஞர் ஒருவர் மோதி உயிரிழந்த சம்பவம் இன்று அதிகாலை மட்டக்களப்பு கருவப்பங்கேணி பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.மட்டக்களப்பு புன்னைச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த விக்கினேஸ்வரராஜா ததூஷன் 24 வயது என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கருவப்பங்கேணி பகுதியில் உறவினர் ஒருவரின் மரணவீட்டிற்கு சென்றுள்ள நிலையில் அதிகாலை 4 மணியளவில் கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு சென்ற ரயிலுடன் மோதி படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில் அவசரசிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிசார் மேற்கொண்டுவருகினர்.
0 Comments