Home » » சாரணிய இயக்கத்தின் தந்தை பேடன்பவுளின் பிறந்தநாள் நிகழ்வு

சாரணிய இயக்கத்தின் தந்தை பேடன்பவுளின் பிறந்தநாள் நிகழ்வு

 

((செ.துஜியந்தன்))


சாரணிய இயக்கத்தி;ன் ஸ்தாபகர் பேடன்பவுளின் 157 ஆவது பிறந்தநாள் நிகழ்வு இன்று(22) பட்டிருப்பு ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் ஓய்வு நிலை உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் நாகராஜா தலைமையில் நடைபெற்றது.



இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பட்டிருப்பு வலயக் கல்விப்பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் கலந்து கொண்டார். அத்துடன் களுவாஞ்சிக்குடி பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரி உபுல் குணவர்த்தன உட்பட் பாடசாலை சரணிய இயக்கத்தின் பொறுப்பாசிரியர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
இங்கு தேசியக்கொடி ஏ;றப்பட்டதுடன், வளாகத்தில் மரநடுகையும் இடம்பெற்றது. நிகழ்வில் கலந்து கொண்டஅனைவரும் சாரணிய கழுத்துப் பட்டி அணிந்து பேடன்பவுளின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்கள்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |