Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு

 


2020ஆம் ஆண்டு முதலாம் வகுப்பில் இணைத்துக்கொள்ளப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பாடசாலை சீருடைக்கான வவுச்சர்கள் எதிர்வரும் 28ஆம் திகதி வரை செல்லுபடியாகும் என கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

குறித்த அறிக்கையில், கொரோனா அச்சம் ஏற்பட்டதன் நிமித்தம் நாட்டில் பல பாகங்களிலும் பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டன.

அதேபோல்,கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டதாலும், பல பகுதிகளுக்கு பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டதாலும் பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இதுபோன்ற காரணங்களால் பாடசாலை சீருடைக்கான வவுச்சர்கள் செல்லுபடியாகும் காலத்தினை எதிர்வரும் 28ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments