Home » » காரைதீவில் அறநெறிப்பாடசாலை மாணவர்களின் தேசிய நிகழ்வு

காரைதீவில் அறநெறிப்பாடசாலை மாணவர்களின் தேசிய நிகழ்வு

 


காரைதீவில் அறநெறிப்பாடசாலை மாணவர்களின் தேசிய நிகழ்வு

செ.துஜியந்தன்

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் எற்பாட்டில் அறநெறிப்பாடசாலை மாணவர்கள் உறுதிமொழி எடுக்கும் தேசிய நிகழ்வு இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அருளானந்தம் உமாமகேஸ்வரன் வழிகாட்டலில் அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் கே.ஜெயராஜி ஒழுங்கமைப்பில் காரைதீவு பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் தலைமையில் காரதீவு சித்தானைக்குட்டி சுவாமி அறநெறிப்பாடசாலையில் நடைபெற்றது.









இந் நிகழ்வில் ஆன்மீக அதிதிகளாக சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள், சிவஸ்ரீ சாந்தரூபன் குருக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் கலந்துகொண்டார். அத்துடன் விசேட அதிதிகளாக ஸ்ரீ சித்தானைக்குட்டி ஆலயத்தின் தலைவர் எஸ்.நந்தேஸ்வரன், காரைதீவு இந்து சமய அபிவிருத்தி சங்கத் தலைவர் எஸ்.மணிமாறன், காரைதீவு நீர்வழங்கல் அதிகாரசபையின் பொறுப்பதிகாரி வி.விஜயசாந்தன், காரையடி ஸ்ரீ பிள்ளையார் ஆலயத்தின் தலைவர் எம்.மயில்வாகனம், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஆ.பூபாலரெத்தினம், சித்தானைக்குட்டி ஆலய செயலாளர் எஷ்.பாஸ்கரன், பொருளாளர் த.தவக்குமார் உட்பட கலாசார உத்தியோகத்தர்கள், அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.  

இங்கு அறநெறிப்பாடசாலை மாணவர்களினால் ஆலயத்திற்கு நாள் தோறும் சென்று மேன்மையான எமது சமயத்தை பக்தியுடன் பின்பற்றுவேன், காலை, மாலை பெற்றோரை வணங்குவேன், குருமார், ஆசிரியர்கள், முதியோர்களுக்கு கீழ்பணிந்து மரியாதையுடன் நடந்துகொள்வேன் போன்ற உறுதிமொழிகள் எடுக்கப்பட்டதுடன். அறநெறிக்கருத்துக்கள் அடங்கிய சைவநூல்களும் அதிதிகளினால் மாணவர்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்தி........

இந்து சமய  கலாசார  அலுவல்கள் திணைக்களத்தின்  ஏற்பாட்டில் அறநெறிபாடசாலை மாணவர்கள் உறுதிமொழி  எடுக்கு  நிகழ்வு ! 

நூருல் ஹுதா உமர்

இந்து சமய  கலாசார  அலுவல்கள் திணைக்களத்தின்  ஏற்பாட்டில் அறநெறிபாடசாலை மாணவர்கள் உறுதிமொழி  எடுக்கு நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (03) இந்துசமய  கலாசார  அலுவல்கள்  திணைக்களத்தின்  பணிப்பாளர் அருளானந்தம் உமாமகேஸ்வரனின் வழிகாட்டலில் அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு சித்தானைக்குட்டி சுவாமி அறநெறிப் பாடசாலையில்  காரைதீவு  பிரதேச  செயலாளர் எஸ். ஜெகராஐன் தலைமையில்  இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு ஆன்மீக அதிதியாக  சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள், சிவஸ்ரீ  சாந்தரூபன் குருக்கள்,  பிரதம  அதிதியாக  அம்பாறை  மாவட்ட  மேலதிக  அரசாங்க  அதிபர்  திரு வே. ஜெகதீசன்,  விசேட  அதிதியாக  ஸ்ரீ சித்தானைக்குட்டி  ஆலயத்தின்  தலைவர் எஸ். நந்தேஸ்வரன், காரைதீவு  இந்து  சமய விருத்திச் சங்கத்தின்  தலைவர் எஸ்.மணிமாறன், காரைதீவு  நீர்வழங்கள் அதிகார சபையின்  பொறுப்பதிகாரி வி.விஐயசாந்தன், காரையடி ஸ்ரீ பிள்ளையார்  ஆலயத்தின்  தலைவர் எம்.மயில்வாகனம், முன்னாள்  பிரதேச சபை உறுப்பினர்  ஆ.பூபாலரெத்தினம், சித்தானைக்குட்டி ஆலய செயலாளர் எஸ். பாஸ்கரன், பொருளாளர் த.தவக்குமார் மற்றும்  இந்து  சமய கலாச்சார  மாவட்ட செயலக அபிவிருத்தி  உத்தியோகத்தர் கு.ஜெயராஜி, காரைதீவு  கலாசார  உத்தியோகத்தர் திருமதி  சிவலோஜினி மற்றும் அறநெறிப்பாடசாலை  ஆசிரியர்கள், மாணவர்கள்  என பலரும் கலந்து கொண்டனர்  
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |