Home » » தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி!!

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி!!

 


சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, அங்கொடவில் அமைந்துள்ள தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கொரோனா தொற்றுக்குள்ளான அமைச்சர் ஹிக்கடுவவில் உள்ள ஒரு சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். இந் நிலையில் நேற்று காலை அவர் கொழும்பின் புறநகர் பொரலஸ்கமுவையில் அமைந்துள்ள சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

எனினும் அவர் அதிகளவான கொவிட் அறிகுறிகளை வெளிப்படுத்தியதன் காரணத்தினால் நேற்று மாலை தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறெனினும் அவர் நன்றாக குணமடைந்து வருவதாக சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதற்கிடையில், அவரது கணவர் காஞ்சனா ஜெயரத்ன மற்றும் அவரது மகள் மீது நேற்றைய தினம் நடத்தப்பட்ட இரண்டாவது சோதனைகளில் கோவிட் 19 க்கு எதிர்மறையாக முடிவுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |