Home » » மட்/கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் பெற்றோர்கள் சிரமதானம்

மட்/கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் பெற்றோர்கள் சிரமதானம்

 


செ.துஜியந்தன்
எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவிருப்பதனால் அனைத்துப் பாடசாலைகளும் கல்வி அமைச்சின் அறிவுறுத்தலுக்கும் சுகாதாரவிதிமுறைகளுக்கேற்ப தயார்படுத்தப்பட்டுவருகின்றன.

இதற்கமைய இன்று  பட்டிருப்புக் கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் அதிபர் எஸ்.கணேஸ்வரன் தலைமையில் பெற்றோர்கள், அசிரியர்கள், பாடசாலை சமூகத்தினால் சிரமதானப்பணி நடைபெற்றது.

டெங்கு அற்ற பாடசாலை, பொலித்தீன் பாவனையற்ற பாடசாலைச் சமூகம் என்ற தொனிப்பொருளில் பாடசாலை சுற்றப்புறச் சூழல் சுத்தம் செய்யப்பட்டதுடன். மாணவர்கள் கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் வகையில் கொரோனா பாதுகாப்பு முன் ஆயுத்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |