Advertisement

Responsive Advertisement

நேற்று மாத்திரம் 715 பேருக்கு கொரோனா தொற்று- மொத்த எண்ணிக்கை 52309ஆக அதிகரிப்பு!!

 


இலங்கையில் நேற்றைய தினம் மாத்திரம் 715 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 52309 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.


இதேவேளை, நேற்றைய தினம் நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 487 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர். இதன்படி, இதுவரையில் பூரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 44 ஆயிரத்து 746 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், தொற்று உறுதியானவர்களில் 7308 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்தோடு, இலங்கையில் இதுவரை 255 பேர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments