Home » » தொடர்ந்தும் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை; மேலும் 349 பேருக்கு தொற்று உறுதி..!!

தொடர்ந்தும் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை; மேலும் 349 பேருக்கு தொற்று உறுதி..!!

 


நாட்டில் மேலும் 349 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.


இந்நிலையில், இலங்கையில் மொத்த கொரோனா பாதிப்பு 57 ஆயிரத்து 936ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, 423 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு இன்று வீடு திரும்பியுள்ள நிலையில் மொத்தமாக 49ஆயிரத்து 684 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

இந்நிலையில், இன்னும் ஏழாயிரத்து 972 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

அத்துடன், இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 280 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |