Home » » மட்டக்களப்பு மாவட்டத்தில் 315 பேருக்கு மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் 8 பேருக்கு கொரோனா

மட்டக்களப்பு மாவட்டத்தில் 315 பேருக்கு மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் 8 பேருக்கு கொரோனா


 சரவணன்)


மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி மற்றும் களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் 315 பேருக்கு நேற்று  சனிக்கிழமை (02) மேற்கொண்ட அன்டிஜன் பிரிசோதனையில் காத்தான்குடியைச் சேர்ந்த 8 பேருக்கு கொரோனா  தொற்றுதி கண்டறியப்பட்டுள்ளது  என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

காத்தான்குடியில் மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் 7 பேருக்கும் களுவாஞ்சிகுடியில் மேற்கொண்ட பரிசோதனையில் காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவர் உட்பட 8 பேருக்கு தொற்றுதி கண்டறியப்பட்டது .

இதேவேளை கடந்த 10 நாட்களில் காத்தான்குடி சுகாதர வைத்திய பிரிவில் 76 போ கொரோனா தொற்றுதி கண்டறியப்பட்டனர். இதனையடுத்து காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவு தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ளதுடன். இதுவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் 226 ஆக அதிகரித்துள்ளதுடன் தொடர்ந்து தீவிரமான சுகாதார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை மட்டக்களப்பு மாநகரசபைக்கு உட்பட்ட  பிரதேசத்தில் தொடர்ந்து இன்று ஞாயிற்றுக்கிழமை வரை வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டுள்ளதுடன், காத்தான்குடி பிரதேச செயலலகப் பிரிவு தொடர்ந்து முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |