Home » » கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 208ஆக அதிகரிப்பு!!

கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 208ஆக அதிகரிப்பு!!

 


இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 208 ஆக அதிகரித்துள்ளது.


இதற்கமைய, கொரோனா மரணங்கள் நான்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்படி ஆலையடிவேம்பு பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய ஆணொருவர், கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்த 91 வயதுடைய பெண்ணொருவர், அகலவத்தை பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய ஆணொருவர் மற்றும் தர்காபகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய ஆணொருவர் ஆகியோர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த நால்வரும் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |