லியோன்)மட்டக்களப்பில் இன்று 97 நபர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட ரபிட் அன்டிஜன் டெஸ்ட் மற்றும் பி.சி.ஆர் மூலம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்குமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கிழக்குமாகாணத்தின் மட்டக்களப்பு பிராந்திய காரியாலயத்தில் பணிபுரிகின்ற உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என 97 பேருக்கும் ரபிட் அன்டிஜன் டெஸ்ட் மூலமான பரிசோதனைகள் இன்று முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு பொதுசுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வைத்தியர் கிரிசுதன் தலைமையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நுண் உயிரியல் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் வைதேகி ரஜீவன் பிரான்சிஸ் மற்றும் வைத்தியசாலை ஆய்வு கூட தொழில் நுட்பவியலாளர்களுடன் மட்டக்களப்பு பொதுசுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொதுசுகாதார பரிசோதகர்கள் இணைந்து ரபிட் அன்டிஜன் டெஸ்ட் மூலமான பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன .
ரபிட் அன்டிஜன் டெஸ்ட் மற்றும் பி.சி.ஆர் மூலம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை மூலம் 97 நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கிடைக்கப்பெற்ற அறிக்கைக்கு அமைய ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்குமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.
0 comments: