பாதுக்க -கலகெதர கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இதன்படி, மறு அறிவித்தல் வரை இந்த தீர்மானம் நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் அதிக கொரோனா தொற்றாளர்கள் பரவலாக அடையாளம் காணப்பட்டமையை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
0 comments: