Advertisement

Responsive Advertisement

நிவர், புரவியை அடுத்து உருவாகும் மற்றுமொரு தாழமுக்கம்

 


நிவர், புரவி என காற்றழுத்த தாழமுக்கங்கள் புயலாக மாறிய நிலையில், நாளைய தினம் அந்தமான்தீவுக்கு அருகில் மற்றுமொரு புதிய காற்றழுத்த தாழமுக்கம் உருவாகும் என இந்திய வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழமுக்கம் படிப்படியாக வலுவடைந்து கடந்த செவ்வாய்க்கிழமை இரவு புரவி புயலாக வலுவடைந்தது.

இலங்கையில் மையம் கொண்டிருந்த இந்தப் புயல் நேற்றிரவு கரையை கடந்தது.

இவ்வாறான நிலையில், நாளைய தினம் புதிய காற்றழுத்த தாழமுக்கம் உருவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments