திருவெம்பாவையை முன்னிட்டு இந்து ஆலயங்களில் மாணிக்கவாசசுவாமிகள் அருளிய திருவாசகம் முற்றோதல் நடைபெற்றுவருகின்றது. இதற்கமைய இன்று(27) மண்முனைப்பற்று புதுக்குடியிருப்பு ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலயத்தில் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கிரிதரக்குருக்கள் தலைமையில் திருவாசகமுற்றோதல் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களையும் சேர்ந்த ஓதுவார்கள் கலந்து கொண்டு முற்றோதலில் ஈடுபட்டதுடன் விசேட பூசைவழிபாட்டிலும் கலந்து கொண்டனர்.
0 Comments