Home » » சோளச்செய்கையாளர்களுக்கு நஷ்டஈடு வழங்குமாறு கோரிக்கை (செ.துஜியந்தன்)

சோளச்செய்கையாளர்களுக்கு நஷ்டஈடு வழங்குமாறு கோரிக்கை (செ.துஜியந்தன்)

 


படைப்புழு தாக்கத்தினால் பாதிப்புற்றிருக்கும் சோளச்செய்கையாளர்களுக்கு நஷ்டஈடு வழங்குமாறு பாதிக்கப்பட்ட சோளச்செய்கையாளர்கள் கோரிக்கைவிடுக்கின்றனர்.
இம்முறை பெரும்போகச் செய்கையில் மட்டு-அம்பாறை மாவட்டங்களில் அதிகளவிலான விவசாயிகள் சோளச்செய்கையில் ஈடுபட்டுவந்த நிலையில் அச் செய்கை அனைத்து படைப்புழுத்தாக்கத்தினால் அழிவடைந்துள்ளது. இதனால் சோளச்செய்கையினை நம்பி தமது வாழ்வாதாரத்தை  முன்னெடுத்துவந்த விவசாயிகள் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர். கடன்பட்டு மிகுந்த கஸ்டங்களுக்கு மத்தியில் மேற்கொண்ட சோளச்செய்கை படைப்புழுவால் நாசமாக்கியுள்ளதாகவும் இதேபோல் கடந்த 2018 ஆம்இ 2019 ஆம் ஆண்டுகளிலும் பாதிப்புக்களை எதிர்நோக்கியதாகவும் இதுவரை தமக்கு எவ்வித நஷ்டஈடுகளும் வழங்கப்படவில்லை என சோளச்செய்கையாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
புடைப்புழுவால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள தமக்கு வாழ்வாதார உதவிகளை அரசாங்கம் வழங்கவேண்டும் என சோளச்செய்கையாளர்கள் கோரிக்கின்றனர்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |