Home » » அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தொடர்ந்தும் பி.சி.ஆர் மற்றும் அன்ரிஜன் பரிசோதனை நடவடிக்கை!!

அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தொடர்ந்தும் பி.சி.ஆர் மற்றும் அன்ரிஜன் பரிசோதனை நடவடிக்கை!!

 


றாசிக் நபாயிஸ், அம்பாறை மாவட்ட பிராந்திய நிருபர்)

அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் எழுமாறான முறையில் தொடர்ந்தும் பி.சி.ஆர் மற்றும் அன்ரிஜன் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின், பாலமுனை, ஒலுவில், தீகவாபி, அட்டாளைச்சேனை ஆகிய கிராமங்களில் நாளாந்தம் இப்பரிசோதனை நடவடிக்கையின் கீழ் 1200க்கும் அதிமானவர்களிடம் இப்பரிசோதனைகள் இடம்பெற்றுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் தெரிவித்தார்.

பிரதேசங்களிலுள்ள வியாபாரிகள், ஓட்டோ சாரதிகள் கட்டாயம் சுகாதார வைத்தியதிகாரியுடன் தொடர்பு கொண்டு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டு, அதற்கான சான்றிதழை பெற்றுக்கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

இதே வேளை, வெளிமாவட்டங்களிலிருந்து வருபவர்கள் மற்றும் தொற்றுடன் தொடர்புள்ளவர்கள், தொற்றுக்கான அறிகுறிகள் கண்டறிந்தவர்கள் கட்டாயம் சுகாதார துறை உத்தியோகத்தர்களுக்கு அறிவிப்பதுடன அவர்கள் சுய தனிமைப்படுத்தலில் இருப்பதும் அவசியமாகும்.

தற்போது, எமது அயல் கிராமங்களிலும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், எமது முடக்கம் செய்யப்பட்டுள்ள பிரதேசங்களில் மக்கள் தத்தமது வீடுகளில் இருக்குமாறும், சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மக்கள் கட்டுப்பாடுகளுடனும், பொறுப்புடனும் செயற்படாது போகும் சந்தர்ப்பத்தில் மேலும் பல கிளை கொத்தனிகள் தோன்றுவதை தவிர்க்க முடியாது போகுமெனவும் சுகாதார வைத்திய அதிகாரி கவலை தெரிவித்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |