இலங்கையில் சற்று முன்னர் மேலும் 406 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இதனை அரசாங்க தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.இவர்களுள் 388 பேர் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.ஏனைய 18 பேரும் சிறைச்சாலை கொத்தணியை சேர்ந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இதனைத்தொடர்ந்து, கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3045ஆக அதிகரித்துள்ளது.இதே நேரம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 30568ஆக அதிகரித்துள்ளது.
0 comments: