Advertisement

Responsive Advertisement

அக்கரைப்பற்றில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி- கிழக்கில் மொத்த எண்ணிக்கை 319ஆக அதிகரிப்பு..!!

 


கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 319ஆக அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார்.


இதன்படி அக்கரைப்பற்று பிரதேசத்தில் இன்று மேலும் 16 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதனைத் தொடர்ந்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அக்கரைப்பற்று பொதுச் சந்தையுடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 171ஆக அதிகரித்துள்ளது.

இதன் அடிப்படையில் மட்டக்களப்பில் 92 பேருக்கும், திருகோணமலையில் 16 பேருக்கும், அம்பாறையில் 12 பேருக்கும், கல்முனையில் 199 பேருக்குமாக கிழக்கு மாகாணத்தில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 319ஆக அதிகரித்துள்ளதாக அவர்மேலும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, பொது மக்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறும், சமூக இடைவெளியை சரியாக கடைபிடிக்குமாறும், முகக்கவசங்களை அணியுமாறும், குழுக்களாக செயற்படுவதை குறைக்குமாறும், தேவைகளுக்கு மாத்திரம் வெளியில் செல்லுமாறும், சுகாதார துறையால் அறிவிக்கப்பட்டுள்ள சட்டதிட்டங்களை சரியாக கடைப்பிடிக்குமாறும் அவ்வாறு கடைபிடிக்காதவர்களை கைது செய்து தனிமைப்படுத்துவதுடன் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments