Home » » பாடசாலை ஆரம்பிப்பது தொடர்பானது கல்வி அமைச்சு அறிவிப்பு

பாடசாலை ஆரம்பிப்பது தொடர்பானது கல்வி அமைச்சு அறிவிப்பு



2021ம் பாடசாலைகளுக்கான சுற்றறிக்கையை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. சுற்றறிக்கை இல 33/2020 பாடசாலை தவணை அட்டவணை வெளியிடப்பட்டது. இதில் தமிழ்,  சிங்கள பாடசாலைகளின் முதலாம் தவணை இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது.
இதன்படி முதலாம் தவணை முதல் கட்டம் 2021 ஜனவரி 04 திங்கட்கிழமை தொடக்கம் 2021 ஜனவரி 15 வௌ்ளிக்கிழமை வரை (இரண்டு நாட்களும் உட்பட) நடைபெற்று க.பொ.த சாதாரண தர பரீட்சைக்காக 16.01.2021 தொடக்கம் 31.01.2021 வரை விடுமுறை வழங்கப்பட்டு  இரண்டாம் கட்டம் 2021 பெப்ரவரி 01 திங்கட்கிழமை தொடக்கம் 2021 ஏப்பிரல் 09  திகதி வௌ்ளிக்கிழமை வரை (இரண்டு நாட்களும் உட்பட) நடைபெறும்.

இரண்டாம் தவணை 2021 ஏப்பிரல் 19 திங்கட்கிழமை தொடக்கம் 2021 ஜுலை 30 வௌ்ளிக்கழமை வரை (இரண்டு நாட்களும் உட்பட) மூன்றாம் தவணை 2021 ஆகஸ்ட் 30 திங்கட்கிழமை தொடக்கம் 2021 டிசம்பர் 03 வௌ்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளது.
முஸ்லிம் பாடசாலைகள் முதலாம் தவணை முதல் கட்டம்
2021 ஜனவரி 04 திங்கட்கிழமை தொடக்கம் 2021 ஜனவரி 15 வௌ்ளிக்கிழமை வரை (இரண்டு நாட்களும் உட்பட) க.பொ.த சாதாரண தர பரீட்சைக்காக 16.01.2021 தொடக்கம் 31.01.2021 வரை விடுமுறை வழங்கப்பட்டு இரண்டாம் கட்டம் 2021 பெப்ரவரி 01 திங்கட்கிழமை தொடக்கம் 2021 ஏப்பிரல் 09 வௌ்ளிக்கிழமை வரை (இரண்டு நாட்களும் உட்பட) நடைபெறும்.
இரண்டாம் தவணை 2021 மே 17 திங்கட்கிழமை தொடக்கம் 2021 ஆகஸ்ட் 25 புதன்கிழமை வரை (இரண்டு நாட்களும் உட்பட) நடைபெற்று 2021 ஆகஸ்ட் 26,27 இரண்டு நாட்களும் விடுமுறை வழங்கப்படும்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |