கொரோனா வைரஸை அறிவியல் மற்றும் விரிவான, சான்றுகள் அடிப்படையிலான அணுகுமுறையால் தோற்கடிக்க முடியும் என்பதை உலக சுகாதார அமைப்பு ஒப்புக் கொண்டுள்ளதுடன் மற்றுமொரு தொற்றுநோய்க்கு உலகம் தயாராக வேண்டும் என்று எச்சரித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் 4.7 கோடிக்கும் பேர் பாதிக்கப்பட்டு உள்ளதுடன், 12 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் தமது உயிரை இழந்துள்ளனர்.
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உலகத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்திய கொரோனா போன்ற எதிர்கால அவசரநிலைகளை கவனித்துக்கொள்வதற்கான ஒரு வரைவு தீர்மானத்தை உலக சுகாதார சபை பரிசீலித்து வருகிறது.
இந்த வரைவு சுகாதார அவசரநிலைகளுக்கான ஆயத்தத்தை வலுப்படுத்தும் மற்றும் சர்வதேச சுகாதார விதிமுறைகளுக்கு (2005) இணக்கமாக இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு கோடிட்டுக் காட்டியுள்ளது.
இது உலகளாவிய நெருக்கடி என்றாலும், பல நாடுகளும் நகரங்களும் ஒரு விரிவான, ஆதார அடிப்படையிலான அணுகுமுறையுடன் வெற்றிகரமாக பரவலை தடுக்கின்றன அல்லது கட்டுப்படுத்தியுள்ளன.
எமக்குத் தேவையான தடுப்பூசிகள், நோயறிதல்கள் மற்றும் சிகிச்சை முறைகளின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கும், அவை அனைத்து நாடுகளுக்கும் சமத்துவத்தின் அடிப்படையில் கிடைப்பதை உறுதி செய்வதற்கும் ஒரு திட்டத்தின் பின்னால் உலகம் முதன்முறையாக அணிதிரண்டுள்ளது.
அடுத்த தொற்றுநோய்க்கு உலகம் இப்போது தயாராக வேண்டும். இது தொடர்பாக உலக சுகாதார சபை சர்வதேச சுகாதார விதிமுறைகளுடன் (2005) மிகவும் வலுவான இணக்கத்தின் மூலம்கொரோனா போன்ற சுகாதார அவசரநிலைகளுக்கான தயார்நிலையை வலுப்படுத்தும் ஒரு வரைவு தீர்மானத்தை பரிசீலிக்கும்.
இந்த தீர்மானம் உலகளாவிய சுகாதார சமூகத்தை கொரோனா மற்றும் பிற ஆபத்தான தொற்று நோய்களைக் கண்டறிந்து சிகிச்சையளிக்க அனைத்து நாடுகளும் சிறந்த முறையில் இருப்பதை உறுதி செய்யுமாறு கோருகிறது.
0 Comments