திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தம்பிலுவிலில் தாதியர் உத்தியோகத்தரின் சடலம் இன்று மீட்க்கப்பட்டுள்ளது.
அட்டாளைச்சேனை வைத்தியாசலையில் தாதிய உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான கந்தப்போடி பிரணவநாதன் என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது .
வீட்டிலிருந்து தனது தோட்டத்திற்கு சென்றவர் அங்குள்ள பூவலில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சுகயீனம் காரணமாக இறந்திருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வருகிறது.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments