Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...!!


 மட்டக்களப்பு மாவட்டத்தின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சற்று முன்னர் 60ஆக உயர்வடைந்துள்ளது.


மட்டக்களப்பு நகரில் இருவருக்கும், ஏறாவூர் பிரதேசத்தில் நான்கு பேருக்கும் கொரோனா தொற்று இன்று (2020.11.07) அடையாளம் காணப்பட்டதன் அடிப்படியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 60ஆக உயர்வடைந்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படியில், கிழக்கு மாகாணத்தில் மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 100ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் மக்கள் சுகாதார அமைச்சால் பரிந்துரைக்கப்பட்ட சட்டதிட்டங்களை சரியான முறையில் கடைப்பிடித்து வெளியில் தேவையில்லாது நடமாடுவதை குறைத்து வீடுகளில் இருக்குமாறும், சுகாதார நடைமுறைகளை சரியாக பின்பற்றி தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் பிறருடனான உரையாடலின் போது முகக்கவசத்தை முறையாக அணியுமாறும் வெளி இடங்களுக்கு போய் வந்தவுடன் கை, கால்களை கழுவுமாறும், வெளி மாவட்டங்களில் இருந்து வருவோரை உடனடியாக பொது சுகாதார பரிசோதகரிடம் அறிவித்து அவருக்கு தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவுமாறும் அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.ண்ணிக்கை 96ஆக

Post a Comment

0 Comments