இலங்கையில் நேற்று மொத்தம் 275 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனால் இலங்கையின் மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 11,335 ஆக உயர்வடைந்துள்ளது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 275 கொரோனா தொறாயர்ளகளில் 232 பேர் முன்னர் கண்டறியப்பட்ட கொரோனா நோயாளர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள்.
ஏனைய 43 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களைச் சேர்ந்தவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி தற்போது மினுவாங்கொடை - பேலியகொட கொரோனா கொத்தாணிப் பரவலில் சிக்கிய மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 7,857 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை நேற்று கொரோனா தொற்றினால் பாதிப்புக்குள்ளான 344 நபர்கள் குணமடைந்த நிலையில் வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர். அதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 5,249 ஆக பதிவாகியுள்ளது.
தற்போது இரண்டு வெளிநாட்டினர் உட்பட 6,065 கொரோனா நோயாளர்கள் நாடு முழுவதும் உள்ள 46 வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேநேரம் கொரோனா தொற்று சந்தேகத்தில் 389 நபர்களும் வைத்தியக் கண்காணிப்பில் உள்ளனர்.
இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகின நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 21 ஆக காணப்படுகிறது.
0 Comments