மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவில் உள்ள களுதாவளை பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார்.
குறித்த நபர் களுதாவளை முருகன் கோயில் வீதியை சேர்ந்த 28வயதுடையவர் என்பதுடன் குறித்த நபர் கொழும்பில் இருந்து வந்து தனிமைப்படுத்தலில் வைத்திருந்து பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டதில் குறித்த நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
0 Comments