Home » » உடன் தெரியப்படுத்தவும் - யாழ் குடாநாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பு

உடன் தெரியப்படுத்தவும் - யாழ் குடாநாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பு

 


யாழ்ப்பாணத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் பேலியகொட மீன் சந்தையிலிருந்து வந்ததன் பின் அவர்கள் பயணித்த இடங்கள் சுகாதார பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது.

இதனை பருத்தித்துறை - மயிலிட்டி - கீரிமலை வழித்தட பயணிகள் கவனத்தில் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழித்தடத்தில் பயணித்தவர்கள் மற்றும் அந்தந்த இடங்களுக்கு சென்றவர்கள் உடனடியாக உங்கள் பகுதி சுகாதார பரிசோதகரிடம் தகவலை உடன் தெரியப்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் பயணித்த வழித்தடங்கள் வருமாறு,

21/10/2020- பருத்தித்துறை - ஜெயாஸ் தையலகம் (மத்திய சந்தைத் தொகுதி) மற்றும் பருத்தித்துறை பஸ் நிலையப் பகுதி

22/10/2020-பருத்தித்துறை ஜெயாஸ் ரெக்ஸ்

23/10/2020 பலாலி வடக்கு அன்ரனிபுரம் - ஞானப்பிரகாசம் ஞானமணி என்பவருடைய இறுதிக்கிரியை நிகழ்வு

அவரது தாய் தந்தை சென்று வந்த இடங்கள்

22/10/2020 - பருத்தித்துறை - கீரிமலை பேருந்தில் மாலை 3.30 மணிக்கு - பொலிகண்டியில் இருந்து - பலாலிக்கு

24/10/2020 -கீரிமலை - பருத்தித்துறை பேருந்தில் பலாலியிலிருந்து - பொலிகண்டி பகுதிக்கு

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |