Advertisement

Responsive Advertisement

மட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை நலன்புரிச் சங்கம் ஒழுங்கு செய்திருந்த சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகள்

  


எம்.ஐ.எம்.அஸ்ஹர்)


பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம்  (தேசிய பாடசாலை) களுவாஞ்சிக்குடி நலன்புரிச் சங்கம் ஒழுங்கு செய்திருந்த சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகள்  இன்று ( 2 ) பாடசாலை அதிபர் எம்..சபேஸ் குமார் தலைமையில் இடம்பெற்றது.
மாணவர்கள்  ஆசிரியர்களாலும் மாணவத் தலைவர்களாலும் இனிப்பு வழங்கி வரவேற்கப்பட்டது டன் பரிசுப் பொருட்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.




எருவில் அரசடிப்பிள்ளையார் ஆலய 
குருக்கள் சிவஸ்ரீ மோகன்ராஜ் சர்மா அவர்களின் தலைமையில் பாடசாலை ஆரம்ப பிரிவு பகுதித்தலைவர் , ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த பாடசாலை  , சரஸ்வதி சிலைக்கு முன்னால் இடம்பெற்ற விசேட பூசையினை  தொடர்ந்து திறந்தவெளியரங்கில் இடம்பெற்ற் சிறுவர் தின நிகழ்வில் அதிபர் எம்.சபேஸ்குமார் , ஆசிரியர்களான பீ.சுதர்சன் ,ரீ.கோகுலசாந்தி மாணவிகளான சீ.கதுஸ்டிகா , க.கியானிகி ஆகியோரின் சிறுவர்கள் தொடர்பான உரைகளும் , மட்டக்களப்பு கல்வியில் கல்லூரி கட்டுரு பயிலுனர் ஆசிரிய மாணவி வீ.மயூரியின் சோலோ பெபோமென்ஸ் விசேட ஒப்பனையும் , ஏ.கலாபராஜன் ஆசியரின் ஓரங்க நாடகமும் ரீ.றுத்திராஹன் ஆசிரியரின் இசையும் அசைவும் நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வுகள் அனைத்தையும் சிரேஸ்ட ஆசிரியர் எஸ்.சுரேந்திரன் தொகுத்து வழங்கியதோடு நலன்புரி சங்கத்தலைவர் ஆர்.துஸாந் , செயலாளர் ரீ.கெளரீசன் ஆகியோர் நெறிப்படுத்தியுமிருந்தனர்.

Post a Comment

0 Comments