Advertisement

Responsive Advertisement

பெரியகல்லாற்றில் இடி மின்னல் தாக்கத்தால் வீட்டு மின் இணைப்பு சேதம் , மின் உபகரணங்கள் செயலிழப்பு

 


(ரவிப்ரியா)


மண்முனை தென் எருவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பெரியகல்லாற்றில் 30ந் திகதி இரவு 7.00 மணியளவில் ஏற்பட்ட பாரிய இடி மின்னல் தாக்கத்தால,; அரச வங்கி முகாமையாளர் ஒருவரின் வீட்டில் உள் மண்டபத்தில் பொருத்தப்பட்டிருந்த பிரதான மின் இணைப்பு கருவி புகைந்து எரியத் தொடங்கியது.
 
 வீட்டு உரிமையாளர்கள் புத்தி சாதூரியமாக செயற்பட்டு மின் தொழில்நுட்பவியலாளர் ஒருவரின் உதவியுடன் அதிஸ்டவசமாக தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அதனால் பாரிய தீ அனர்த்தம் ஒன்று தவிர்க்கப்பட்டது. எனினும் உடல் ரீதியில் வீட்டுரிமையாளர்களான தம்பதிகள் இருவரும் சிறு பாதிப்பிற்குள்ளாகினர்;.

இதே வேளை பெரியகல்லாற்றில் பல வீடுகளில் இடி மின்னல் தாக்கத்தால,; மின் குமிழ்கள் செயலிழந்துள்ளதுடன் மின் உபகரணங்களும் பாதிக்கப்பட்டது

Post a Comment

0 Comments