Home » » உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய ஒருவர் கைது

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய ஒருவர் கைது

 


திருகோணமலையில் ஆள் மாறாட்டம் செய்து உயர்தரப் பரீட்சையில் தோற்றிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை – சம்பூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேனையூர் மத்திய கல்லூரியில் வெளிவாரியாக பரீட்சை எழுத வருகை தந்த ஒருவரை ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சம்பூர் பொலிஸார் இன்று(13) கைது செய்துள்ளனர்.

இதில் வெருகல் – மாவடிச்சேனை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை நாளை ​(14) மூதூர் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சம்பூர் பொலிஸர் தெரிவிக்கின்றனர்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |