நாட்டில் நேற்றைய தினம் மாத்திரம் 9,974 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுக்கும் தேசிய செயல்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட மொத்த பி.சி.ஆர். சோதனைகளின் எண்ணிக்கையானது 348,909 ஆக காணப்படுகிறது. நாட்டில் இதுவரை 5,170 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 3,357 பேர் குணமடைந்தும் உள்ளமை குறிப்பிடத்தக்தகது.
0 Comments