இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த 54 வயதுடைய பெண்ணொருவர் சற்று முன்னர் உயிரழந்த நிலையிலேயே இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
குறித்த கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்தவர் என சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
அத்துடன் குறித்த பெண் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தவர் என சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் கூறுகின்றார்.
0 Comments