Home » » 18 ரயில் நிலையங்களில் ரயிலை நிறுத்துவதற்கு தடை...!

18 ரயில் நிலையங்களில் ரயிலை நிறுத்துவதற்கு தடை...!


 பிரதான ரயில் பாதையில் ராகம, படுவத்த தொடக்கம் யத்தல்கொட வரையில் 18 ரயில் நிலையங்களில் ரயில்கள் நிறுத்தப்படமாட்டாது என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.


நேற்று நள்ளிரவு முதல் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் காலப்பகுதிக்குள் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்ததாக அத்திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, புத்தளம் ரயில் பாதையில் பேரலந்த தொடக்கம் குரண வரையில், நேற்று நள்ளிரவு முதல் குறிப்பிட்ட பகுதிக்குள் உள்ள ரயில் நிலையங்களில் ரயிலை நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |