சாய்ந்தமருது 15 கடற்கரை வீதியில் அமைந்துள்ள எஸ்.எம்.ஆர் மீன் விற்பனை நிலையம் தீப்பற்றி எறிந்துள்ளது .
இன்று (13) மாலை தீப்பற்றி எரிந்த நிலையில் அவ்விடத்தில் கூடிய பொதுமக்கள் தீயை அணைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்த போதிலும் இந்த தீ விபத்தின் போது குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் நிறுவை இயந்திரம் உட்பட பல பொருட்கள் முற்றாக சேதமடைந்துள்ளது.
இந்த நிலையில் தீ பிடித்ததற்கான காரணம் அறியப்படாத நிலையிலும் மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments