Home » » மட்டக்களப்பு- மக்களின் வீட்டு பிரச்சினைகள் தொடர்பில் கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சருடன் இரா.சாணக்கியன் கலந்துரையாடல்!!

மட்டக்களப்பு- மக்களின் வீட்டு பிரச்சினைகள் தொடர்பில் கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சருடன் இரா.சாணக்கியன் கலந்துரையாடல்!!

 


மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும்  கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருள் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் இண்டிக அனுரத்த ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று (2020.09.22) நடைபெற்றது.


இந்த கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட மக்களின் வீட்டுப் பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இராஜாங்க அமைச்சர் உடன் கலந்துரையாடியுள்ளத்தக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில் 
மட்டக்களப்பு மாவட்டத்தில் ''உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்'' எனும் தொனிப்பொருளில் அமுல் படுத்தப்பட்டு வருகின்ற கிராமத்துக்கொரு வீடு எனும் திட்டம் தொடர்பாகவும் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்ட வீட்டுத் திட்டங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இரா.சாணக்கியன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் 

வறுமைக் கோட்டுக்குட்பட்ட வீட்டு வசதிகளற்ற மக்களுக்காக 06 லட்சம் ரூபாய் பெறுமதியான வீடுகள் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற போதிலும் மேற்படி வீட்டினை பூரணப்படுத்துவது தொடர்பில் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக தன்னால் இராஜாங்க அமைச்சரிடம் தெளிவு படுத்தப்பட்டுள்ளதாகவும் இதற்கான கொடுப்பனவுகள் அனைத்தும் துரிதபடுத்தப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்ததாக எமது செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஏற்கனவே அமுல்ப்படுத்தப்பட்டு பூரணப்படுத்தப்படாமல் இருக்கின்ற வீட்டுத்திட்டங்கள் தொடர்பில் தான் உரிய நடவடிக்கைகளை அமைச்சுக்கள் ஊடாக கலந்தாலோசித்து மேற்கொள்ள இருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அவர்கள் தெரிவித்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |